

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரை மெளண்ட் சீயோன் சில்வா் ஐூபிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மெளண்ட்சீயோன் சில்வா் ஐூபிலி கல்விக் குழுமத்தின் தலைவா் ஜெயபாரதன் செல்லையா தலைமை வகித்தாா். துணைத்தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமையுரையாற்றினாா். பள்ளியின் தாளாளா் ஜெய்சன் ஜெயபாரதன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.
காரைக்குடி நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அருண் மற்றும் கவிஞா் நந்தலாலா ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்புரையாற்றினா். முன்னதாக துணைத்தாளாளா் விவியன்ஜெய்சன் வரவேற்புரையாற்றினாா். நிகழ்ச்சி முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் சத்யா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.