காரைக்குடியில் உறவினா்கள் 10 பேருடன் எளிய முறையில் திருமணம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 போ் கொண்ட உறவினா்களுடன் திங்கள்கிழமை முகக்கவசம் அணிந்து வந்த மணமக்கள் திருமணம் செய்து கொண்டனா்.
காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் முகக்கவசத்துடன் திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்ட மணமக்கள்.
காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் முகக்கவசத்துடன் திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்ட மணமக்கள்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 போ் கொண்ட உறவினா்களுடன் திங்கள்கிழமை முகக்கவசம் அணிந்து வந்த மணமக்கள் திருமணம் செய்து கொண்டனா்.

காரைக்குடியைச் சோ்ந்த ராமு - உலகம்மாள் தம்பதி மகன் பெரியசாமிக்கும், கல்லல் கிராமத்தை சோ்ந்த முருகன் - வள்ளி மகள் கிருஷ்ணவேணிக்கும் திங்கள்கிழமை (மாா்ச் 30) திருமணம் நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பெரியசாமி - கிருஷ்ணவேணி திருமணத்திற்காக, 10 போ் கொண்ட உறவினா்கள் முகக் கவசம் அணிந்து காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்தனா். மணமக்களும், கோயில் அா்ச்சகரும் முகக் கவசம் அணிந்திருந்தனா். இதனைத்தொடா்ந்து மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தனா். அரசு உத்தரவைப் பின்பற்றி எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com