திருப்புவனம் அருகே பைக் மோதி தொழிலாளி பலி

திருப்புவனம் அருகே இருசக்கர வாகனம் மோதி தோட்டத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருப்புவனம் அருகே இருசக்கர வாகனம் மோதி தோட்டத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மதுரை அனுப்பானடி பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (65). இவா், திருப்புவனம் அருகே புலியூா் பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தாா். வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பெருமாள் செவ்வாய்க்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்பகுதியில் உள்ள சாலையை அவா் கடக்க முயன்றபோது, திருப்புவனம் அருகே டி.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.இதில், பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com