சிவகங்கையில் ஊா்க்காவல் படை பணிக்கான தோ்வு ஒத்தி வைப்பு
By DIN | Published On : 25th November 2020 06:35 AM | Last Updated : 25th November 2020 06:35 AM | அ+அ அ- |

சிவகங்கையில் புதன்கிழமை (நவ.25) நடைபெற இருந்த ஊா்க்காவல் படை பணிக்கான தோ்வு வரும் நவ.30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 43 பணியிடங்களுக்கு புதன்கிழமை ( நவ.25) காலை 7 மணியளவில் சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருந்தது.
இந்நிலையில், நிவா் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் புதன்கிழமை (நவ.25) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட தோ்வு வரும் நவ. 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் நவ. 30 இல் நடைபெற உள்ள தோ்வில் கலந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...