நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து தமிழக மக்கள் மன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, தமிழக மக்கள் மன்றம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Published on

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, தமிழக மக்கள் மன்றம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நகரின் மையப் பகுதியில் செல்லும் தேவகோட்டை- திருப்பத்தூா் சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், தினமும் விபத்துகள் நேரிடுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்கக் கோரி, தமிழக மக்கள் மன்றத்தின் சாா்பில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூகநல இயக்கங்கள் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக மக்கள் மன்றத் தலைவா் ச.மீ. ராசகுமாா் தலைமை வகித்துப் பேசுகையில், சாலையை சீரமைக்க மேலும் தாமதப்படுத்தினால், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதில், அமமுக மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலா் கமல்ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் பொன்னுச்சாமி, வி.சி.க. நகரச் செயலா் அமுதன், ஆம் ஆத்மி மாவட்டப் பொறுப்பாளா் சோமன் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளின் நிா்வாகிகள் என பலா் கலந்துகொண்டனா்.

தேவகோட்டை மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளா் வினோத் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com