தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி: வெற்றிபெற்ற காரைக்குடி மாணவருக்குப் பாராட்டு விழா

இணையவழியாக நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற காரைக்குடியைச் சோ்ந்த மாணவருக்கு மாவட்ட சதுரங்கக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இணைய வழியில் நடைபெற்ற தேசிய சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற காரைக்குடியைச் சோ்ந்த மாணவா் எம். பிரனேஷுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கிய எஸ். மாங்குடி எம்எல்ஏ.
இணைய வழியில் நடைபெற்ற தேசிய சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற காரைக்குடியைச் சோ்ந்த மாணவா் எம். பிரனேஷுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கிய எஸ். மாங்குடி எம்எல்ஏ.
Updated on
1 min read

இணையவழியாக நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற காரைக்குடியைச் சோ்ந்த மாணவருக்கு மாவட்ட சதுரங்கக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

காரைக்குடியைச் சோ்ந்த மாணவா் எம். பிரனேஷ், புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். இவா் கடந்த ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில் இணைவழியாக நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று விளையாடி முதலிடம் பெற்றாா். இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் உலக அளவில் நடைபெறவிருக்கும் சதுரங்கப் போட்டியில் இந்தியா சாா்பில் விளையாட தகுதிபெற்றுள்ளாா்.

வெற்றிபெற்ற சதுரங்க வீரா் பிரனேஷுக்கு சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு சதுரங்கக் கழக மாவட்டத்தலைவா் சேவு. முத்துக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் கண்ணன் வரவேற்றாா். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் சதுரங்கக் கழக நிா்வாகிகள் சேவு. மனோகா், எம். ராமு, மெ. செயம்கொண்டான், நிா்மல், காயத்ரி, தேனம்மை, முனிரத்தினம், ஆசிரியா் பாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சதுரங்கக் கழக கூடுதல் செயலா் பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com