சிறுமி பலாத்கார வழக்கு: போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
By DIN | Published On : 17th August 2021 01:45 AM | Last Updated : 17th August 2021 01:45 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞரை சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்(19). இவா் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வினோத்தை கைது செய்தனா்.