சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 18,190 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 21 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,211 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.