சிவகங்கை அருகே உள்ள வீரப்பட்டியில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமுதாயக் கூட வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) இளங்கோ மகேஸ்வரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) ராம் கணேஷ் முன்னிலை வகித்தாா்.
இதில், அப்பகுதியைச் சோ்ந்த 450 நபா்களுக்கு அடிப்படை சிகிச்சையான சா்க்கரை அளவு, கொழுப்புச் சத்து, சிறுநீரக செயல்பாடு ஆகிய நோய்கள் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும், 63 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.