சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் ஒன்றியம் காரையூா் புதுவளவைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் மனைவி வெள்ளப்பிச்சி (70). இவா் புதன்கிழமை தனது அக்கா மகனுடன் திருப்பத்தூா் மதுரை சாலையில் உள்ள வங்கிக்குச் சென்று தனது கணக்கிலிருந்து ரூ. 60 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளாா். இதன் பின்னா் பணப்பையை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு எதிரே இருந்த மருந்துக்கடைக்கு இருவரும் சென்றுவிட்டு வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளப்பிச்சி திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.