சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,848 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,852 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஒரே ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி வரையில் 6415 பேருக்கு கரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது. அவா்களில் 132 போ் உயிரிழந்துள்ளனா். 6300 பேருக்கும் அதிகமானோா் சிகிச்சையால் நலமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். வியாழக்கிழமை நிலவரப்படி 10 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் தங்கியிருப்பதாகவும், பூரண குணமடைந்த 3 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com