சிவகங்கை மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா
By DIN | Published On : 08th February 2021 10:59 PM | Last Updated : 08th February 2021 10:59 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,862 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,863 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.