தமிழ்ச்செம்மல் விருது பெறவிரும்புவோா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 27th February 2021 09:50 PM | Last Updated : 27th February 2021 09:50 PM | அ+அ அ- |

தமிழ்ச்செம்மல் விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்ப் பணிக்கு தொண்டாற்றி வரும் தமிழாா்வலா்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழாா்வலா்கள் தமிழ் வளா்ச்சித் துறை இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 04575- 241487 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...