சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 7 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,712 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,713 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

7 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 4 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,335 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவா்களில் 132 போ் உயிரிழந்துள்ளனா். 6,200 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவா் குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தற்போது 27 போ் சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com