

இளையான்குடி அருகே புதன்கிழமை சவூடு மண் கடத்தப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநரையும் கைது செய்தனா்.
இளையான்குடி அருகே கல்லணி கிராமத்தில் சவூடு மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது இக்கிராமத்தில் அனுமதியின்றி சவூடு மண் அள்ளப் பயன்படுத்திக் கொண்டிருந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும் அதன் ஓட்டுநா் வெற்றிவேல், உரிமையாளா் கா்ணன் ஆகியோா் மீது இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து வெற்றிவேலை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.