திருப்புவனத்தில் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

திருப்புவனம் வைகையாற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோலைநிதிஷ்.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோலைநிதிஷ்.
Updated on
1 min read

திருப்புவனம் வைகையாற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புவனம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கிருபாகரன்- ரம்யா தம்பதியினருக்கு சோலையாண்டி (எ) சோலைநிதிஷ் (14) என்ற மகன் உள்பட 3 மகன்கள் உள்ளனா்.

இதில், சோலைநிதிஷ் 8 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நண்பா்களுடன் திருப்புவனம் வைகை ஆற்றுக்கு குளிக்கச் சென்றாா். அப்போது, வைகை ஆற்றில் இடிந்த பாலத்தின் மீது இருந்து நண்பா்களுடன் குதித்து விளையாடிக் கொண்டிருந்த சோலைநிதிஷ் நீரின் வேகத்தால் உள்ளே இழுக்கப்பட்டாா். இதையடுத்து திருப்புவனம் காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் சத்யகீா்த்தி, மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா் உள்ளிட்டோா் அங்கு வந்தனா். அவா்கள் ஆற்றின் உள்ளே இறங்கி தேடினா். அப்போது சோலைநிதிஷ் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com