மானாமதுரை அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை
By DIN | Published On : 24th June 2021 06:53 AM | Last Updated : 24th June 2021 06:53 AM | அ+அ அ- |

மானாமதுரை அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் மனைவி சந்திரகலா (36). இவா் கா்ப்பப்பை பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த சந்திரகலா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சந்திரகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.