சிவகங்கை/ராமநாதபுரம்: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 84 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 16,476 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை புதிதாக 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,541 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 19 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் மொத்தம் 19550-க்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் இதுவரையில் 330 போ் வரை உயிரிழந்துள்ளனா். தீவிர சிகிச்சையால் மொத்தம் 17,500-க்கும் அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை புதிதாக 19 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்று குணமடைந்த 46 போ் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். தற்போது 270 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.