சிவகங்கையில் அக். 29-இல் விவசாயிகள் குறைதீா்க்கும் முகாம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் அக். 29-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் அக். 29-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் அக். 29 ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ள உள்ளனா். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com