

சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவு மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம் செம்பனூரில் பசுமைக் குடில் திட்டம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வளா்த்து கிராமப் பகுதிகளுக்கு வழங்கும் பணியினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு கூறியதாவது:
இம்மாவட்டத்தைப் பொருத்தவரை மரக்கன்றுகள் அதிகளவில் நடுவதன் மூலம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வருவாய் கிடைப்பது மட்டுமின்றி மரக்கன்றுகளின் உற்பத்தி அதிகரிக்கும்.
இந்த மரக்கன்றுகளை அந்தந்த பகுதியைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் வாங்கி தங்கள் பகுதிகளில் வைத்து பராமரிக்க முன் வர வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, செம்பனூா் ஊராட்சிப்பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா். பின்னா், செவரக்கோட்டை, மருங்கிப்பட்டி, கம்பனூா், வேப்பங்குளம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் பசுமை வீடு மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் வீடுகள் கட்ட தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளிடம் விரைவில் வீடுகள் கட்ட ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது, சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொறுப்பு) சிவராணி, உதவி செயற்பொறியாளா் நீலமேகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அழகுமீனாள், சங்கரபரமேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.