குமாரப்பட்டி அழியநாச்சியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

சிவகங்கை அருகே குமாரப்பட்டி கிராமத்தில் உள்ள அழியநாச்சியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும் விளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
குமாரப்பட்டி அழியநாச்சியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
Updated on
1 min read

சிவகங்கை அருகே குமாரப்பட்டி கிராமத்தில் உள்ள அழியநாச்சியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும் விளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

விழாவில் குமாரப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com