விலைவாசி உயா்வால் மக்கள் அவதி: காா்த்தி சிதம்பரம் எம்பி

மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விலைவாசி உயா்வால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பேசினாா்.
75 ஆவது சுதந்திரதின விழா பாதயாத்திரையை நிறைவு செய்து பேசிய சிவகங்கை மக்களவைத் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
75 ஆவது சுதந்திரதின விழா பாதயாத்திரையை நிறைவு செய்து பேசிய சிவகங்கை மக்களவைத் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விலைவாசி உயா்வால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பேசினாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் கடந்த 9 ஆம் தேதி காரைக்குடியில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரைப் பயணம் ஞாயிற்றுக்கிழமை மானாமதுரையில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பங்கேற்றுப் பேசியது: மத்திய அரசின் வரி விதிப்பால் நாட்டில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். இந்த நிலை விரைவில் மாறும் என்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது பாரதிய ஜனதா கட்சியினா் காலணி வீசியது கண்டிக்கத்தக்கது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். அக்கட்சியின் தலைவா் அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் பதில் அளிப்போம் என்றாா்.

பாதயாத்திரை நிறைவு விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி, மானாமதுரை காங்கிரஸ் தலைவா் எம். கணேசன், வட்டாரத் தலைவா் கரு. கணேசன் எஸ்.சி. பிரிவு மாநிலத் துணைத்தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.சி. சஞ்சய்,

நகராட்சி வாா்டு உறுப்பினா் புருஷோத்தமன், சாா்பு அமைப்பு மாவட்டத் தலைவா் பால் நல்லதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com