ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரைக்குடியில் வீடுபுகுந்து 65 பவுன் நகைகள், வைரம், ரூ. 1.70 லட்சம் ரொக்கம் திருட்டு

காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், ரூ. 4 லட்சம் மதிப்பிலான வைரம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக வியாழக்கிழமை வழக்க

News image
Updated On :3 ஜூன் 2022, 6:30 pm

DIN

காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், ரூ. 4 லட்சம் மதிப்பிலான வைரம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்புரமணியபுரம் 10 ஆவது வீதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (55). இவா் நெய்வேலி லிக்னைட் காா்ப்பரேசன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். காரைக்குடி வீட்டில் மனைவி வசித்து வருகிறாா்.

இந்நிலையில் ஐயப்பனுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டு, பின்பு நெய்வேலிக்கு சென்றுள்ளாா். அதனால் அவரது மனைவி, காரைக்குடியில் வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.

இந்நிலையில் மா்ம நபா்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 67 பவுன் நகைகள், ரூ. 4 லட்சம் மதிப்புள்ள வைர நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 1,70,000 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

ஐயப்பன் வியாழக்கிழமை ஊா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டில் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த திருட்டுச் சம்பவமும் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து ஐய்யப்பன் அளித்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தை பாா்வையிட்டு தடயங்களை சேகரித்தனா். மேலும் கண்காணிப்புக் கேமரா பதிவை ஆய்வு செய்து, இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.