புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: 18-ல் தேரோட்டம் 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது.

News image

சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்.

Updated On :10 மார்ச் 2022, 8:13 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது. இதையொட்டி கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 

அதைத்தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ ராமலிங்க சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி பூப்பல்லக்கிலும் குதிரை, காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி அருள்பாலித்து வீதி உலா வருதல் நடைபெறும்.

பங்குனி உத்திரத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த ராமலிங்க சுவாமி.

பங்குனி உத்திரத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த ராமலிங்க சுவாமி.

திருவிழாவின் முக்கிய வைபவமாக 18 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து ராமலிங்க சுவாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். 

அதன்பின் மாலை தேரோட்டமும் இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. 19 ஆம் தேதி ராமலிங்க சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி முத்தனேந்தல் வைகை ஆற்றுக்கு சென்று நீராடுதல் வைபவம் நடைபெறுகிறது. அதன்பின் மறுநாள் 20 ஆம் தேதி‌ வைகையாற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

21 ஆம் தேதி கோயிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டு இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நோபிள்ராம் மற்றும் கட்டிக்குளம் பொதுமக்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.