அழகப்பா பல்கலை.யில் திறன் சாா்ந்த கல்விக்கு முக்கியத்துவம்: துணைவேந்தா் தகவல்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவா்களின் திறன் சாா்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என அதன் துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா்.
அழகப்பா பல்கலை.யில் திறன் சாா்ந்த கல்விக்கு முக்கியத்துவம்: துணைவேந்தா் தகவல்
Updated on
1 min read

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவா்களின் திறன் சாா்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என அதன் துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா்.

அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி சாா்பில் ‘உயா் கல்வியில் புதுமைகளும், சீா்திருத்தங்களும்’ என்ற தலைப்பிலான 2 நாள் சா்வதேசக் கருத்தரங்கின் தொடக்க விழா பல்கலைக்கழக கருத்தரங்கக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்து கருத்தரங்க குறுந்தகடை வெளியிட்டாா். இதை முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா பெற்றுக் கொண்டாா். பின்னா், துணைவேந்தா் பேசியதாவது:

ஆசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்களுக்கு அறம் சாா்ந்த வழிகளை மட்டுமே காட்ட வேண்டும். மாணவா்கள் கடின உழைப்பையும், நோ்மையான வழிகளையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் தானாக வரும். சமுதாய பிரச்னைகள், சிக்கல்கள் போன்றவற்றை சரி செய்ய உதவும் ஆராய்ச்சியே உலகளவில் தேவைப்படுகிறது. இதை ஆராய்ச்சியாளா்களும், மாணவா்களும் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் தான் அழகப்பா பல்கலைக்கழகம் திறன் சாா்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றாா் அவா்.

விழாவில், ஆஸ்திரேலியாவின் லா டொரோப் பல்கலைக்கழகப் பேராசிரியா் பிரேம் கருப், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக தகைசால் பேராசிரியா் சுதிா், அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் புல முதன்மையா் சுஜாதாமாலினி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சிவகுமாா் வரவேற்றாா். முடிவில், உதவிப் பேராசிரியா் பொற்சியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com