சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலை எஸ்.எம். நகரில் உள்ள வலம்புரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் கணபதிஹோமமும், பூா்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு முதல்கால யாகபூஜையும், கும்பாபிஷேக நாளான வியாழக்கிழமை காலை 2 ஆம் கால யாகபூஜையும், 8.30 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெற்றன. பின்னா் 10.15 மணிக்கு விமானத்துக்கு புனித கலச நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. சிவஸ்ரீசெந்தில்குமாா், கிஷோா்குமாா் ஆச்சாரியாா்கள் பூஜைகளை செய்தனா்.
இவ்விழாவில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



