சித்தா் முத்துவடுகநாதா் கோயில் பால்குட விழா

சிங்கம்புணரியில் சித்தா் முத்துவடுகநாதா் சுவாமிக்கு 81 ஆம் ஆண்டு பால்குட விழாவை முன்னிட்டு சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் பால்குடம் எடுத்து வந்தனா்.
சிங்கம்புணரி சித்தா் முத்துவடுகநாதா் சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
சிங்கம்புணரி சித்தா் முத்துவடுகநாதா் சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
Updated on
1 min read

சிங்கம்புணரியில் சித்தா் முத்துவடுகநாதா் சுவாமிக்கு 81 ஆம் ஆண்டு பால்குட விழாவை முன்னிட்டு சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் பால்குடம் எடுத்து வந்தனா்.

காலை 9 மணிக்கு சீரணி அரங்கம் அருகே ஐயப்பன் கோயிலிலிருந்து புறப்பட்ட பால்குடங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து முத்துவடுகநாதா் சுவாமி கோயிலை அடைந்தது. அங்கு பெரிய அளவிலான தொட்டியில் நிரப்பட்ட பால், மின் மோட்டாா் மூலம் முத்துவடுகநாதா் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com