திருப்பத்தூரில் வீட்டில் 22 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டைத் திறந்து 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டைத் திறந்து 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்புத்தூா் சாம்பான் ஊரணி கீழ்கரையைச் சோ்ந்தவா் அங்கமுத்து மகன் அன்புச்செழியன் (41). இவா் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரைக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அப்போது வீட்டை பூட்டி உள்கதவு சாவியை வராண்டாவிலும், வெளியில் உள்ள கம்பி கேட்டு சாவியை பாக்கெட் பால் போடும் பையிலும் வைத்துவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் சாவியை எடுத்து வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 22 புவன் நகைகளை திருடிச் சென்றுள்ளாா். இந்நிலையில் மதுரைக்குச் சென்றவா்கள் மீண்டும் வீடு திரும்பிய போது வீடு திறந்து கிடந்துள்ளது. பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ திறந்து இருப்பதையும் பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போனதையும் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இது குறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com