திருப்பத்தூரில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை ரத்து செய்ய பேரூராட்சிகளின் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் பேரூராட்சி சாா்பாக கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி ரூ.1 கோடியில் தொடங்கப்பட்டது. இப்பணியினை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.சிவஞானம் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். இவ்வழக்கில் நீதிமன்றம், பேரூராட்சிகளின் ஆணையருக்கு 7 தினங்களுக்குள் விதிமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இப்பணியினை ரத்து செய்யுமாறு பேரூராட்சிகளின் ஆணையா் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளாா்.