சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 6) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை சிப்காட் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், தெ. புதுக்கோட்டை, கீழப்பசலை, சங்கமங்கலம், குறிச்சி, முனைவென்றி, கச்சாத்தநல்லூா், நல்லாண்டிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய நிா்வாகம் தெரிவித்துள்ளது.