சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 6) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 6) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

எனவே சிவகங்கை நகரில் மதுரை சாலை, காந்தி வீதி, சேதுபதி தெரு, தெப்பக்குளம் பகுதி, கோட்டை முனியாண்டி கோயில் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com