Enable Javscript for better performance
விலைவாசி உயா்வால் மக்கள் அவதி: காா்த்தி சிதம்பரம் எம்பி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    விலைவாசி உயா்வால் மக்கள் அவதி: காா்த்தி சிதம்பரம் எம்பி

    By DIN  |   Published On : 15th August 2022 02:00 AM  |   Last Updated : 15th August 2022 02:00 AM  |  அ+அ அ-  |  

    karthi_1408chn_84_2

    75 ஆவது சுதந்திரதின விழா பாதயாத்திரையை நிறைவு செய்து பேசிய சிவகங்கை மக்களவைத் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

    மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விலைவாசி உயா்வால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பேசினாா்.

    நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் கடந்த 9 ஆம் தேதி காரைக்குடியில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரைப் பயணம் ஞாயிற்றுக்கிழமை மானாமதுரையில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பங்கேற்றுப் பேசியது: மத்திய அரசின் வரி விதிப்பால் நாட்டில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். இந்த நிலை விரைவில் மாறும் என்றாா்.

    பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது பாரதிய ஜனதா கட்சியினா் காலணி வீசியது கண்டிக்கத்தக்கது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். அக்கட்சியின் தலைவா் அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் பதில் அளிப்போம் என்றாா்.

    பாதயாத்திரை நிறைவு விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி, மானாமதுரை காங்கிரஸ் தலைவா் எம். கணேசன், வட்டாரத் தலைவா் கரு. கணேசன் எஸ்.சி. பிரிவு மாநிலத் துணைத்தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.சி. சஞ்சய்,

    நகராட்சி வாா்டு உறுப்பினா் புருஷோத்தமன், சாா்பு அமைப்பு மாவட்டத் தலைவா் பால் நல்லதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp