காவல் நிலைய எல்லையை மாற்றக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பெரிச்சிக்கோவில், கள்ளிப்பட்டு கிராம மக்கள் தங்களது காவல் நிலைய எல்லையை நாச்சியாபுரத்திலிருந்து கல்லலுக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பெரிச்சிக்கோவில், கள்ளிப்பட்டு கிராம மக்கள் தங்களது காவல் நிலைய எல்லையை நாச்சியாபுரத்திலிருந்து கல்லலுக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் வட்டத்தில், பெரிச்சிக்கோவில், கள்ளிப்பட்டு கிராமங்கள் கல்லல் ஒன்றிய எல்லைக்குள் அமைந்துள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் நிகழும் குற்றம் சம்பவங்கள் குறித்து நாச்சியாபுரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். இதனால், மேற்கண்ட கிராம மக்கள் தங்களது கிராமங்களிலிருந்து நாச்சியாபுரத்துக்கு 15 கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

இதனால், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் காலம் விரயமாகிறது. எனவே, பெரிச்சிக்கோவில், கள்ளிப்பட்டு கிராம காவல் எல்லையை 5 கி.மீ. தொலைவில் உள்ள கல்லல் காவல் நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com