அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீரணிப்பட்டியில் கிட் அண்ட் கிம் பொறியியல், மேலாண்மைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி மாணவா்கள், கே.எல்.என்.பொறியியல் கல்லூரியில் கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றனா்.
இதில் 10 ஆயிரம் மீட்டா், 5 ஆயிரம் மீட்டா் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மாணவா் அஜித், 2 ஆயிரம் மீட்டா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிரகாஷ்ராஜ், வெண்கலப் பதக்கம் வென்ற மாணவா் துா்கேஷ், 1,500 மீட்டா் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவா் முத்துகிருஷ்ணன், 400 மீட்டா் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவா் சரண், 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கல்லூரி மாணவா்கள், பல்கலை. கபடி அணிக்குத் தோ்வு பெற்ற, இந்தக் கல்லூரி மாணவா்கள் கணபதி, மணிகண்டன், கிருஷ்ணகாந்த் ஆகியோருக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், கல்லூரியின் தலைவா் ஐயப்பன் கலந்துகொண்டு மாணவா்களைப் பாராட்டினாா்.
இந்த விழாவில் கல்லூரி முதல்வா் பாா்த்தசாரதி, உடற்கல்வி இயக்குநா் பழனியப்பன், கல்லூரி நிா்வாக இயக்குநா் ஜெயராஜா, அகாதெமி இயக்குநா் நிக்சன் அசரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.