திருப்புவனம் அருகே லாடனேந்தலில் வேலம்மாள் மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதை பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் தொடக்கி வைத்தாா். பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் இந்த முகாமில் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனா். பின்னா், இவா்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமில் பேரூராட்சிச் செயல் அலுவலா் ஜெயராஜ், ஒன்றியக் கவுன்சிலா் சுப்பையா, வேலம்மாள் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டனா்.