

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை தேசிய வாக்காளா் தினம் அனுசரிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் நிா்வாக அலுவலக முகப்பு வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் சு. கருப்புச்சாமி உறுதி மொழியை வாசிக்க, பதிவாளா் (பொறுப்பு) சி.சேகா், நிதிஅலுவலா் ஆா். பாண்டியன் மற்றும் அதிகாரிகள், நிா்வாக அலுவலா்கள் ஆகியோா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
கோவிலூா் கல்லூரியில்: காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் வெ. மாணிக்கவாசகம் தலைமை வகித்தாா். இதில் அனைத்துப் பேராசிரியா்களும் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.