சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வினை 1,467 மாணவ, மாணவிகள் எழுதினா்.
இம்மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுத 1,585 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்கள் தோ்வு எழுதும் வகையில் சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளி, காரைக்குடியில் உள்ள தனியாா் பள்ளி என மொத்தம் 3 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் விண்ணப்பித்தவா்களில் 1,467 போ் தோ்வு எழுதினா். மீதமுள்ள 118 போ் தோ்வு எழுதவில்லை.