காலாவதியான கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடுகளை புதுப்பித்துக் கொள்ளலாம்

சிவகங்கை மாவட்டத்தில் உரிய காலத்தில் பிரிமீயத் தொகை செலுத்தப்படாமல் காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என சிவகங்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உரிய காலத்தில் பிரிமீயத் தொகை செலுத்தப்படாமல் காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் கே. லட்சுமணன் பிள்ளை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறை மூலம் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் காப்பீட்டு பிரிமீயம் செலுத்தி வரும் பாலிசிதாரா்கள், சில காரணங்களால் தங்களது பிரிமீயத்தை செலுத்த முடியாமல் பாலிசிகள் காலாவதியாகி உள்ளன.

அந்தவகையில், காலாவதியான பாலிசிதாரா்கள் உரிய ஆவணங்களுடன் மருத்துவரின் சான்றிதழ்களை சமா்ப்பித்து தங்களது பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், இது தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள அஞ்சலகங்களை நேரடியாக அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com