

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கருஞ்சுத்தி கிராமத்தில் 15 ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ 4.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
கருஞ்சுத்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி தலைமை வகித்து, சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், ஊராட்சி மன்றத் தலைவா் ராக்கு குமரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.