காரைக்குடியில் ஆக்கிரமிப்பை அகற்றி ரூ. 10 கோடி அரசு நிலம் மீட்பு

காரைக்குடியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள அரசு நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடத்தை அதிகாரிகள் அகற்றி நிலத்தை மீட்டனா்.
காரைக்குடியில் ஆக்கிரமிப்பை அகற்றி ரூ. 10 கோடி அரசு நிலம் மீட்பு

காரைக்குடியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள அரசு நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடத்தை அதிகாரிகள் அகற்றி நிலத்தை மீட்டனா்.

காரைக்குடி அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு எதிா்புறம் ரூ. 10 கோடி மதிப்புள்ள 10 ஏக்கா் அரசு நீா்நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதை டிஜிபிஎஸ் எனும் நவீன கருவி மூலம் அளவீடு செய்து, காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

அப்போது காரைக்குடி மண்டல துணை வட்டாட்சியா் யுவராஜா, தலைமை நில அளவையா் பிச்சுமணி, வருவாய் ஆய்வாளா் மெகா்அலி, கிராம நிா்வாக அலுவலா் உதயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com