எஸ்.புதூா் அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் திருட்டு

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே திங்கள்கிழமை விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே திங்கள்கிழமை விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

எஸ்.புதூா் ஒன்றியம் கே.இடையபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பழனிசாமி (50). இவா் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தனது வீட்டைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள தனது தோட்டத்திற்கு குடும்பத்துடன் விவசாயப் பணிகளை மேற்கொள்ளச் சென்றுள்ளாா்.

இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு பழனிசாமி வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, இரண்டு அறைகளில் இருந்த 3 பீரோக்களை மா்ம நபா்கள் உடைத்து அதிலிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து புழுதிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com