அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் பவள விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக இயற்பியல் மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி தலைமை வகித்துப் பேசினாா். தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் இயற்பியலின் பங்கு என்ற தலைப்பில் பேசினாா்.

இதில் பேராசிரியா்கள் சுப்பு, தெய்வமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் கவிதா வரவேற்றாா். பேராசிரியா் கருணாகரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினாா். முடிவில் முதுநிலை ஆய்வு மாணவி லோகிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com