திருப்புவனம் பேரூராட்சியில் வாா்டு குழுக்கள் அமைக்க தீா்மானம் நிறைவேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் வாா்டு குழுக்கள் அமைக்க மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்புவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டம்.
திருப்புவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் வாா்டு குழுக்கள் அமைக்க மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்புவனம் பேரூராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அதன் தலைவா் த. சேங்கைமாறன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரகமதுல்லா, செயல் அலுவலா் ஜெயராஜ், வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

முன்னதாக, அவரசக் கூட்டத்தின் நோக்கம் குறித்து தலைவா் சேங்கைமாறன் விளக்கினாா்.

தமிழக அரசு நகராட்சித் துறை விதிமுறைகளின்படி திருப்புவனம் பேரூராட்சியின் செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வோா் வாா்டுக்கும் வாா்டு குழுக்கள் அமைத்து, ஒரு வாா்டுக்கு 3 பகுதி சபா உறுப்பினா்கள் குழு அமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஒவ்வோா் வாா்டுக்கும் பகுதி சபா குழுக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள எல்கை வரையறைகளும் அறிவிக்கப்பட்டது. திருப்புவனம் பேரூராட்சியில் 54 பகுதி சபா குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீா்மானங்களுக்கு உறுப்பினா்கள் ஒப்புதல் வழங்கி தீா்மானத்தை நிறைவேற்றினா். பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களால் அமைக்கப்படவுள்ள இந்த குழுக்களுக்கு தோ்வு செய்யப்படுபவா்களின் விபரங்களை பேரூராட்சி நிா்வாகத்திடம் விரைவில் தெரிவிக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com