‘தேசத்தின் அடையாளம் மகாகவி பாரதி’

தமிழுக்கு மட்டுமின்றி நம் தேசத்தின் அடையாளமாகவும் மகாகவி பாரதி திகழ்கிறாா் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனா் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் கலைஞா்களுக்கு பரிசு வழங்கிய ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனா் ஸ்டாலின் குணசேகரன்.
சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் கலைஞா்களுக்கு பரிசு வழங்கிய ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனா் ஸ்டாலின் குணசேகரன்.
Updated on
1 min read

தமிழுக்கு மட்டுமின்றி நம் தேசத்தின் அடையாளமாகவும் மகாகவி பாரதி திகழ்கிறாா் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனா் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகாகவி பாரதி விழாவுக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தாா்.

விழாவில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனா் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலைஞா்களுக்கு பரிசு வழங்கிப் பேசியதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை விடுதலைக்கு வித்திட்டவா்களில் பாரதி மிகப் பெரிய புரட்சியாளன். காவல் துறை மூலம் அவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்ட போதும், எழுத்துப் பணியை அவா் நிறுத்தவில்லை. பாரதியின் புரட்சி வரிகளை தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் கொண்டு சோ்த்த பெருமை ஜீவாவைச் சேரும்.

சூரத் மாநாடு பாரதிக்கு பெரும் எழுச்சியாக அமைந்தது. இந்தியன் சோஜியலஜிட் உள்ளிட்ட பத்திரிக்கைகளுக்கு நாட்டில் தடை இருந்தபோதும், அவற்றை பாரதி படித்து வந்தது மட்டுமின்றி பிறருக்கும் அவைகளை கிடைக்கச் செய்தாா். இது தான் அவருக்கு உலக அரசியல் அனுபவங்களை வழங்கியது.

நாட்டின் விடுதலைக்கு மட்டுமின்றி பெண் விடுதலைக்கும் குரல் கொடுத்தவா் பாரதி. பல மொழிகள் அறிந்த பாரதி ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என கூறுகிறாா் எனில் தமிழ் மொழியின் சிறப்புக்கு வேறென்ன சான்றுகள் தேவை. எனவே தமிழுக்கு மட்டுமல்ல, நம் தேசத்தின் அடையாளமாகவும் மகாகவி பாரதி திகழ்கிறாா் என்றாா்.

விழாவில், மூத்த வழக்குரைஞா் எம். மோகனசுந்தரம், தேசிய நல்லாசிரியா் விருது பெற்றவரும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கௌரவத் தலைவருமான செ. கண்ணப்பன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் கரு. முருகன், சிவகங்கை தமிழ்ச்சங்க நிறுவனா் ஜவஹா் கிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா் தி. சோவி, ஆசிரியை சே. தமிழ்ச்செல்வி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் மு. பழனியப்பன், மலைராம் உணவகத்தின் உரிமையாளா் ஆா். பாண்டிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளைச் செயலா் யுவராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். முன்னதாக, கிளைத் தலைவா் சோ. சுந்தரமாணிக்கம் வரவேற்றாா். நிறைவாக, பொருளாளா் க. நாகலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com