

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு புதன்கிழமை சீருடைகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் தலைவரும் பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் செயலாளா் கிருஷ்ணன், திமுக நகரச் செயலாளா் நாகூா்கனி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகுமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கண்ணன், வேல்பாண்டி, பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.