பெண்ணைத் தாக்கி நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மா்ம நபா்கள் தாக்கி நகையைப் பறித்துச் சென்றனா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மா்ம நபா்கள் தாக்கி நகையைப் பறித்துச் சென்றனா்.

சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூா் ஒன்றியம் கே.புதுப்பட்டியை சோ்ந்தவா் சுகந்தி (40). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் கொட்டாம்பட்டியிலிருந்து கே.புதுப்பட்டி நோக்கி மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

சூரப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, 3 மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டியும், தாக்கியும் அவா் அணிந்திருந்த நகையைப் பறித்து கொண்டு வாகனப் பதிவு எண் பலகை இல்லாத இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனா்.

இதில் காயமடைந்த சுகந்தி புழுதிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com