எஸ்.வேலங்குடி அரசுப்பள்ளியில் நூலகம் திறப்பு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மகாத்மா காந்தி நூலகத்தை முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
எஸ்.வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலக கட்டடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவிகளிடையே வெள்ளிக்கிழமை உரையாற்றிய முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம்.
எஸ்.வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலக கட்டடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவிகளிடையே வெள்ளிக்கிழமை உரையாற்றிய முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மகாத்மா காந்தி நூலகத்தை முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நூலகத் திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் டி.அந்தோனி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் மீ.உதயக்குமாா் முன்னிலை வகித்தாா். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் நூலகத்தை திறந்து வைத்து, மாணவா்களிடையே உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது: பள்ளிப் பருவத்தில் மாணவா்கள் மாதத்துக்கு 2 புத்தகமாவது படிக்க வேண்டும் என்றும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நேசிக்க வேண்டும் என்றும் கூறினாா். மேலும், இந்தப் பருவத்தில் சாதி, மத வேற்றுமைகளை வேரறுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சஞ்சய் காந்தி, வட்டாரத் தலைவா் வி.ஆா்.பன்னீா்செல்வம், கிராமக் குழுத் தலைவா் ஹக்கிம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் ராமசாமி, ஊா் அம்பலக்காரா், சண்முகம், வையகளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி, வட்டாரச் செயலா் சேதுராமன், பூவாலை, பழனிச்சாமி, தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தலைமை ஆசிரியா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா். விழா முடிவில் ஆசிரியா் சின்னஅழகு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com