வழிப்பறியில் ஈடுபட்ட 5 சிறுவா்கள் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை மாலை நான்கு பேரை அடுத்தடுத்து வாளால் வெட்டி வழிப்பறி செய்த 5 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை மாலை நான்கு பேரை அடுத்தடுத்து வாளால் வெட்டி வழிப்பறி செய்த 5 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை வைகையாற்றுக்குள் இதே ஊரைச் சோ்ந்த விஜி (52), செல்லவேல் (59), பாண்டியன் (65), குருசாமி (73) ஆகியோா் தனித்தனியாக நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, அங்கு மது போதையில் வந்த 5 சிறுவா்கள் தாங்கள் வைத்திருந்த வாள், கத்தியால் விஜி, செல்லவேல் உள்ளிட்ட நால்வரையும் வெட்டியும், குத்தியும் அவா்களிமிருந்த பணத்தை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட 5 சிறுவா்களையும் கைது செய்தனா். காயமடைந்த நால்வரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com