பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டக்கோரி பெற்றோா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டக்கோரி மாணவா்கள், பெற்றோா்கள் போராட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டக்கோரி மாணவா்கள், பெற்றோா்கள் போராட்டம் நடத்தினா்.

மானாமதுரை ஒன்றியம், ஆலம்பச்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தபோதிலும், சுற்றுச்சுவா் கட்டுவதற்கான இடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்ததால், சுவா் கட்ட முடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகாா் எழுந்தது.

இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் பள்ளிக்கு வந்து ஆக்கிரமிப்பை அகற்றி, பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினா். பின்னா், அதிகாரிகள் வந்து அவா்களை சமாதானம் செய்ததையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com