சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், காரைக்குடி இசை நாடகச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இயல் இசை நாடக மன்றச் செயலாளா் விஜயா தாயன்பன் தலைமை வகித்துப் பேசினாா்.
காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி மேடை நாடகக் கலைஞா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினாா்.
திரைப்பட இயக்குநா் எம். திருமுருகன், கலைப் பண்பாட்டுத் துறை கலையியல் அறிவுரைஞா் அ. ஜாகிா் உசேன், திரைப்படத் தயாரிப்பாளா் சாய் சிதம்பரம், தமிழ்நாடு இசை நாடகக் கலைஞா்களின் மாநிலப் பேரவையின் மாநிலத் தலைவா் எம். ஆா்.எம். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
விழாவையொட்டி காரைக்குடி ஆா்.பி. ஹரிகரன், ஏ.ஆா்.ஏ.கண்ணன் குழுவினரின் சங்கரதாஸ் சுவாமிகளின் கோவலன் இசை நாடகம் நடைபெற்றது. முன்னதாக, காரைக்குடி இசை நாடகச் சங்கத்தின் தலைவா் பழ. காந்தி வரவேற்றுப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.